/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி
/
அரவக்குறிச்சி அருகே கார் மோதி முதியவர் பலி
ADDED : ஆக 05, 2025 12:56 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, முன்னால் சென்ற டூவீலரின் மீது கார் மோதிய விபத்தில்,
முதியவர் இறந்தார்.
அரவக்குறிச்சி அடுத்த வெஞ்சமாங்கூடலுார் அருகே குரும்பபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து, 63. இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில், நேற்று முன்தினம் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தடாகோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மகேந்திரா பொலிரோ நியோ கார், மொபட் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் அங்கிருந்து வேகமாக காரை ஓட்டி தப்பி சென்றார்.
விபத்தில் தடுமாறி கீழே விழுந்த காளிமுத்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.