/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி
/
வேலாயுதம்பாளையம் அருகே நடந்து சென்ற முதியவர் பலி
ADDED : ஏப் 19, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
வேலாயுதம்பாளையம் அருகே, நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 93; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பெருமாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கிசிச்சையின் போது பெருமாள் உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

