/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி
/
சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து பலி
ADDED : மே 07, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:வெள்ளியணையில், சுவரில் ஏறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 90. இவர் கடந்த, 24ல், வெள்ளியணையில் உள்ள பகவதி அம்மன் கோவில் சுவரில், காய வைக்கப்பட்டிருந்த,
சிமென்ட் பையை எடுக்க ஏறியுள்ளார். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்த முத்துசாமி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், முத்துசாமி உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.