ADDED : ஆக 12, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, வட்டமலை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர் ராதாருக்மணி, 75; இவர், நேற்று முன்தினம் இரவு, 9:40 மணியளவில், மாத்திரை டப்பாவை திறக்கும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
மயங்கிய அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ராதாருக்மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அவரது மருமகள் அனிதா ராஜலட்சுமி, 42, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.