/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்
/
அரவக்குறிச்சியில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்
ADDED : மார் 15, 2024 04:02 AM
அரவக்குறிச்சி: உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
அரவக்குறிச்சியில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அரவக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 250க்கும் மேற்பட்டோர், 45க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஓட்டுச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அரவக்குறிச்சி தாசில்தார் வெங்கடேஷன், தனி தாசில்தார் அமுதா, புகழூர் தாசில்தார் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

