sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்

/

கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்

கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்

கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம்:பீதியில் மக்கள்


ADDED : ஜன 18, 2024 01:02 PM

Google News

ADDED : ஜன 18, 2024 01:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே சாலை நடுவே மின் கம்பம் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் விபத்து பயத்தில் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

கரூர் தான்தோன்றிமலை அருகே, கருப்பன் கவுண்டன்புதுார் பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலை நடுவே இருந்த மின் கம்பத்தை, பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கப்படும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சாலை அமைக்கும் பணி முடிந்து பிறகு மின் கம்பம் மாற்றி அமைக்கவில்லை. தற்போது மின் கம்பம் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும், தின்னப்பா நகர், காந்தி கிராமம் பகுதியில் இருந்து வரும் பள்ளி வாகனங்கள், கருப்பகவுண்டன்புதுார் பகுதி வழியாக தான் தோன்றிமலைக்கு செல்கிறது. அப்போது, சாலை நடுவே உள்ள, மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கருப்பன்கவுண்டன்புதுாரில், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றகோரி, பல முறை கோரிக்கை வைத்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருவோர், மின் கம்பத்தில் மோதி காயம் அடைகின்றனர்.

சிறிய அளவிலான விபத்து ஏற்படும் போதெல்லாம், மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us