/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையின் நடுவே மின் கம்பங்கள்: மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
/
சாலையின் நடுவே மின் கம்பங்கள்: மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
சாலையின் நடுவே மின் கம்பங்கள்: மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
சாலையின் நடுவே மின் கம்பங்கள்: மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 01, 2024 01:25 AM
சாலையின் நடுவே மின் கம்பங்கள்: மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
கரூர், டிச. 1-
கரூர் அருகே சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கரூர் அருகே, தான்தோன்றிமலை தின்னப்பா நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. அப்போது, சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை, வேறு இடத்துக்கு மாற்றாமல் விட்டு விட்டனர்.
இந்நிலையில், மின் கம்பம் உள்ள சாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. மேலும், இருசக்கர வாகனங்களில், பொதுமக்கள் சென்று வருவதால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு சிலர் காயமடைந்துள்ளனர்.
எனவே, தின்னப்பா நகரில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை சாலை ஓரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

