/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : ஆக 02, 2025 01:35 AM
.
குளித்தலை, குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 58. சவுண்ட் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:15 மணியளவில் குளித்தலை நகராட்சி காவல்காரன் தெருவில் உள்ள, லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே, மின் இணைப்பை பரிசோதிக்க மின் கம்பத்திலிருந்து ஏறினார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த ரவியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராமநாதன், 33, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.