/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
/
நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:  குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, டி.இடையப்பட்டி நடுநிலைப்பள்ளியில் உள்ள, 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுசாமி தனது சொந்த நிதியில், பொங்கல் கரும்பை வாங்கி கொடுத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்களுடன் சேர்ந்து வண்ண வண்ண கோலமிட்டு, பொங்கல் சமைத்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.

