sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: காகித ஆலை கோரிக்கை

/

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: காகித ஆலை கோரிக்கை

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: காகித ஆலை கோரிக்கை

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: காகித ஆலை கோரிக்கை


ADDED : செப் 14, 2024 07:06 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என, கரூர் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிர்வாகம் சார்பில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு, கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: ஈரோட்டில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் (எண்-06612) கரூர் அருகே புகழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை, 5:39 மணிக்கு வந்து விட்டு, 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும். கடந்த, 2023 அக்., 1 முதல் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் மாலை, 5:29 மணிக்கு வந்து விட்டு, 5:30 மணிக்கு செல்கிறது. இதனால், காகித ஆலையில் மாலை, 5:30 மணிக்கு ஷிப்ட் முடிந்த பிறகு தொழிலாளர்கள், தொழில் பழகுனர்கள், ஆசிரியர்கள், ஐ.டி.ஐ., மாணவர்கள், கரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலை முன்பு இருந்தது போல மாலை, 5:39 மணிக்கு, புகழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டு, 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us