sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு

/

ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : அக் 14, 2024 05:17 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: திருச்சி ரயில்வே இருப்பு பாதை வழியில், கட்டளையில் மேம்-பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

கரூர் அருகே, திருச்சி ரயில்வே இருப்பு பாதையில், கட்ட-ளையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் - திருச்சி இடையே நாள்தோறும், 30க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில்கள் செல்லும்போது, கட்டளையில் உள்ள கேட் மூடப்படுகி-றது. அந்த சமயத்தில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கட்டளை, மேல மாயனுார் பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியவில்லை.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது:

கரூர் அருகே, கட்டளை சுற்று வட்டார பகுதிகளில், வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளன. அதனிடையே ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், சிறிய குகை வழிப்பாதை மட்டும் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அந்த வழியாக செல்ல முடியவில்லை. கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் முக்-கிய பாதையாக மாறி வருகிறது. அதிக ரயில்கள் செல்ல வாய்ப்-புள்ளது. தற்போது, மின் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால், கரூர் - சேலம் ரயில்வே வழித்தடத்தில் கட்டளை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டிய மழை






      Dinamalar
      Follow us