sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வாய்க்காலில் புதரை அகற்ற எதிர்பார்ப்பு

/

கழிவுநீர் வாய்க்காலில் புதரை அகற்ற எதிர்பார்ப்பு

கழிவுநீர் வாய்க்காலில் புதரை அகற்ற எதிர்பார்ப்பு

கழிவுநீர் வாய்க்காலில் புதரை அகற்ற எதிர்பார்ப்பு


ADDED : ஜூலை 09, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள, செடி கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-திருச்சி சாலை கொளந்தானுார் தெரசா கார்னர் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதில், அதிகளவில் செடி கொடிகள் முளைத்துள்ளன. மேலும், கழிவுநீர் வாய்க்காலில் பல இடங்களில், மண் திட்டுக்கள் காணப்படுகின்றன.

இதனால், கடந்த மாதம் பெய்த மழையின் போது, திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில், மழைநீர் சாலையில் ஓடியது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடி கொடிகள், மண் திட்டுக்கள், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us