ADDED : அக் 23, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: க.பரமத்தி அருகே, பாம்பு கடித்ததால், விவசாயி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி மேலகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் வேலுசாமி, 70; இவர் கடந்த, 19ல் விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததால் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.