sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை விவசாயிகள் அகற்ற கோரிக்கை

/

அமராவதி கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை விவசாயிகள் அகற்ற கோரிக்கை

அமராவதி கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை விவசாயிகள் அகற்ற கோரிக்கை

அமராவதி கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை விவசாயிகள் அகற்ற கோரிக்கை


ADDED : டிச 19, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 19-

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட் டத்தில் சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதி அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடி பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அடுத்த கட்டமாக உரம் இடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணி நடக்க உள்ளதால், அமராவதி அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிளை வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் வழியாக செல்லும், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us