/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
10 நாட்களில் ஆத்துப்பாளையம் அணை 12 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
10 நாட்களில் ஆத்துப்பாளையம் அணை 12 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
10 நாட்களில் ஆத்துப்பாளையம் அணை 12 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
10 நாட்களில் ஆத்துப்பாளையம் அணை 12 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 28, 2025 01:24 AM
கரூர்,க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.
க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கசிவு நீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் சாயக்கழிவு பிரச்னையால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.90 அடியை தண்ணீர் எட்டியது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஆத்துப்பாளையம் அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 21.32 அடியாக இருந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 285 கன அடி தண்ணீர் வந்தது.
கடந்த, 10 நாட்களில் அணையின் நீர்மட்டம், 12 அடி வரை உயர்ந்துள்ளது. தண்ணீர் வரத்து தொடர்ந்தால், அணை நிரம்ப வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து, பாசன தேவைக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

