/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலையில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
தோகைமலையில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 05, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை, பொருந்தலுார், நானுார்,கழுகூர், பாதிரிப்பட்டி, கல்லடை பகுதிகளில் நேற்று மாலை, 5:20 மணியளவில் மழை துவங்கியது.
6:30 மணி வரை கன மழை பெய்தது. திடீரென மழை பெய்ததால், நிலத்தில பயிரிடப்பட்ட பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்ததாகவும், கால்நடைகளுக்கு புல் மேய்ச்சலுக்கு ஏற்றதாகவும் அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், உழவு பணிக்கு ஏற்றபடி இருந்ததாக தெரிவித்தனர்.