/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
/
சாலை இருபுறமும் முள்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
ADDED : டிச 19, 2024 01:06 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 19-
புங்காற்று நெடுகை பகுதி செல்லும் சாலையின், இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, புதுப்பட்டி பகுதியில் புங்காற்று நெடுகை செல்கிறது. இது செல்லும் வழி தார் சாலையாக உள்ளது. இதன் வழியாக விவசாயிகள் வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் இருபுறமும், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அறுவடை செய்யப்படும் பொருட்கள் எடுத்து வரும் போது, சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.