ADDED : ஜூன் 12, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., மனசினம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியின், 15 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தனது மகளை காணவில்லை என, அவரது தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.