ADDED : செப் 05, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., பிள்ளையார் கோவில்பட்டியை சேர்ந்த முருகேசன், 52, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் திரிஷா, 21, எல்.ஐ.சி., ஏஜென்ட் நடத்தி வரும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஆக., 19 காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.