ADDED : ஜூன் 21, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தென்னிலை அருகே, தந்தையை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், தென்னிலை வடக்கு கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 62; இவர் கடந்த மே, 5ல் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.
இதுவரை வீடு திரும்வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் துரைசாமி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் சிவகாமி, 38; போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.