ADDED : ஏப் 28, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
குளித்தலை : குளித்தலை அடுத்த ஆர்த்தி மலை பஞ்சாயத்து, மேல புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 26. இவரது தந்தை முருகேசன் கடந்த 24 மதியம், 12:00 மணியளவில் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கும் போகவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது தந்தையை காணவில்லை என, சரவணன் கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
