sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்

/

அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்

அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்

அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்


ADDED : மார் 04, 2024 11:42 AM

Google News

ADDED : மார் 04, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கரூர் மற்றும் பசுபதிபாளையம் நகரங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே ஐந்து சாலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

அப்போது, பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிந்ததால், அமராவதி ஆறு வெளிச்சத்தில் திளைத்தது. தற்போது, பாலத்தில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பயனில்லை என புலம்புகின்றனர். இதனால், புதிய உயர் மட்ட பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் எரிய வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us