/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்
/
சாலை விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம்
ADDED : டிச 19, 2025 06:00 AM
ப.வேலுார்: ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வாகனங்-களை சிறப்பு சோதனை செய்ய நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டார். அதன்-படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் அறிவுறுத்தல்படி, பரமத்தி பைபாஸ் சாலையில் மோட்டார் வாகன ஆய்-வாளர் பிரபாகரன் வாகனங்களை சிறப்பு சோதனை மேற்கொண்டார்.
இதில், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதமாக, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறிய, 10 வாக-னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்-டது. மேலும் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கப்படுகிறதா என கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து, 18 வயது நிரம்பாத சிறார்கள் டூவீலர் ஓட்ட அனுமதித்தால், சிறார்களின் பெற்றோர்க-ளுக்கு 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என, பெற்-றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

