sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

/

பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு


ADDED : ஜூன் 08, 2025 12:58 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சியில், திங்கள்தோறும் வாரச்சந்தை கூடுகிறது. ஏராளமானோர் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர். பள்ளப்பட்டி சந்தை வளாகம் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது புதிய நகராட்சி கட்டடம் சந்தை வளாகத்திலேயே அமைந்துள்ளதால், இடம் பற்றாக்குறை காரணமாக சந்தைக்கு வெளியே, பொது சாலையை ஆக்கிரமித்து சந்தை நடந்து வருகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், சந்தை வளாகம் அருகிலேயே பஸ் ஸ்டாண்டும் உள்ளதால், சந்தைக்கு வருவோர், தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தி செல்வது வழக்கம். இதேபோல் சந்தை அருகே அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு மாலை, 6:00 மணியளவில் இஸ்லாமியர் தொழுகைக்கு வருவதுண்டு. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று, சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர் ஆகியோர், பஸ் ஸ்டாண்ட் அருகே வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இந்த வாகனங்களுக்கு, சந்தையில் சுங்கம் வசூலிப்பவர்களை பயன்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்தினால் போலீசார் அபராதம் விதிப்பர். ஆனால், சுங்கம் வசூலிப்பவர்கள் அபராதம் விதிப்பது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் கேட்டனர்.

இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஆர்த்தி கூறுகையில், ''பஸ் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிப்பது இயல்பு. வரும் காலங்களில் பஸ் ஸ்டாண்டில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us