/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி குப்பையில் தீ: புகையால் பாதிப்பு
/
நகராட்சி குப்பையில் தீ: புகையால் பாதிப்பு
ADDED : பிப் 20, 2026 05:30 AM

குளித்தலை: குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் குப்பை சேமிப்பு கிடங்கு, 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்-கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்-கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் சில நேரங்களில், குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லாமல், துாய்மை பணியாளர்கள் குளித்-தலை பெரியபாலம் பரிசல் துறை காவிரி ஆற்-றங்கரையில், கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.
இதனால், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை புகை மண்டலமாக காணப்படுவதால் போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பரிசல்துறையில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. குப்-பையில் இருந்து வரும் புகை, பள்ளி வகுப்ப-றைக்குள் செல்வதால் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் இப்பகுதியில் குடியி-ருப்போர், புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.எனவே, சேகரிக்கப்படும் குப்பைகளை முறை-யாக கிடங்குக்கு கொண்டு சென்று, மக்கும், மக்கா குப்பையாக பிரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

