ADDED : பிப் 14, 2026 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்; கரூர் மாவட்டம், நடையனூர் அருகே சொட்-டையூர் பகுதியை சேர்ந்தவர் கவுசிக், 35. விவ-சாயி. இவரது தோட்டத்தில், சவுக்கு கன்றுகளை வைத்து வளர்ப்பதற்காக, பிளாஸ்டிக் பாக்ஸ்-களை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸ்கள் நேற்று முன்தினம் எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் வேக-மாக பிளாஸ்டிக் பாக்ஸ்கள் எரிந்து கொண்டிருந்-ததால் தீயணைப்பு
நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள், தீயை கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பர-வாமல் தடுத்தனர்.

