ADDED : செப் 02, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்-படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்-கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால் மீன், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, திருக்காம்-புலியூர், சேங்கல், புலியூர் ஆகிய
பகுதியில் இருந்து வந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர்.