/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'ஜோர்'
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை 'ஜோர்'
ADDED : அக் 21, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து கதவணை அருகே உள்ள கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 300 கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.