ADDED : செப் 22, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து கதவணை அருகே உள்ள கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
தற்போது, புரட்டாசி மாதம் என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்கள் விற்பனை மந்தமாக இருந்தது. ஜிலேபி மீன் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கெண்டை, 90 ரூபாய், பாறை, 200 ரூபாய், விரால், 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.