sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்

/

மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்

மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்


ADDED : ஜூலை 01, 2025 12:58 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாயனுார் கதவணையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில், மீன் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில், மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரியாற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு, 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாயனுார் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கதவணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, மீன்களை வாங்க பொதுமக்கள், மாயனுார் கதவணைக்கு நாள்தோறும் செல்கின்றனர். இதனால், மாயனுார் கதவணையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனையாகிறது. மீன்களின் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ, 80 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us