sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

23 நாட்களாக போக்கு காட்டும் 2 சிறுத்தைகள் துப்பாக்கியுடன் வனத்துறை தேடுதல் வேட்டை

/

23 நாட்களாக போக்கு காட்டும் 2 சிறுத்தைகள் துப்பாக்கியுடன் வனத்துறை தேடுதல் வேட்டை

23 நாட்களாக போக்கு காட்டும் 2 சிறுத்தைகள் துப்பாக்கியுடன் வனத்துறை தேடுதல் வேட்டை

23 நாட்களாக போக்கு காட்டும் 2 சிறுத்தைகள் துப்பாக்கியுடன் வனத்துறை தேடுதல் வேட்டை


ADDED : நவ 30, 2025 03:07 AM

Google News

ADDED : நவ 30, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை கடந்த, 7ல், புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபா-ளையம் கிராமத்தில் பட்டப்பகலில் புகுந்து ஆடுகளை அடித்து கொன்றதோடு, அங்குள்ள மலை குன்றில் பதுங்கியது. சிறுத்-தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் வைத்த நிலையில், அதே மலைக்குன்றில், 12ம் தேதி மற்றொரு சிறுத்தை நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டது.

இதனால் மூன்றாவது கூண்டும் வைக்கப்பட்டு, நடமாட்டத்தை கண்காணிக்க கேமராவும் பொருத்தினர். ஆனாலும், 23 நாட்களாக சிக்காமல் போக்கு காட்டி வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதனால் ஆடுகளை பாதுகாத்து கொள்ள, மலைக்குன்றை ஒட்-டிய விவசாய தோட்டங்களில் அமைத்துள்ள ஆட்டுப்பட்டிகளை காலி செய்து ஆடுகளை, ஊருக்குள் பட்டி அமைத்து வேறிடத்-துக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். நேற்று முன்தினம் மலைக்குன்று அடிவாரத்தில் சிறுத்தை உறுமல் சத்தம் கேட்டதாக மக்கள் கூறியதால், வனத்துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து நேற்று மதியம் வரை மலைக்குன்று முழுவதும் துப்-பாக்கியுடன் ஆய்வு மேற்கொண்டும் சிறுத்தை தென்படவில்லை.ஆனாலும், இரவில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம். சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, வனத்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us