sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்

/

அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்

அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்

அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் ஆவணமில்லா டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜூலை 29, 2025 05:30 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்; கரூரில், அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் அறக்கட்டளை சார்பில், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டிராக்டரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், எம்.ஆர்.வி., என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். இவர், 2016 - 2021 முதல் கரூரில், கோவை சாலை, ஜவஹர் பஜார் உட்பட பல இடங்களில், 'கானகத்திற்குள் கரூர்' என்ற பெயரில், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

ஓரளவு வளர்ந்துள்ள மரங்களுக்கு, அறக்கட்டளை சார்பில், டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. டிராக்டருக்கு, உரிய ஆவணங்கள் இல்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து, மரங்களுக்கு நேற்று டிராக்டர் மூலம், ஆண்டாங்கோவில் புதுாரை சேர்ந்த பெருமாள், 54, என்பவர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் டவுன் போலீசார் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி, டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us