/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
22 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி தொடக்கம்
/
22 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி தொடக்கம்
22 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி தொடக்கம்
22 முதல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு இலவச பயிற்சி தொடக்கம்
ADDED : ஜன 13, 2025 03:09 AM
கரூர்: வரும், 22 முதல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர், வெண்ணைம-லையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு உள்பட பல்வேறு போட்டி தேர்வுக-ளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம் வழியில் நடத்தப்படுகிறது. தற்போது, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, வரும், 22 முதல் தொடங்கப்படவுள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், ஸ்மார்ட் போர்டு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்-வுகள், வாராந்திர தேர்வுகள், இணையவழி தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டுகளில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில், அதிகப்படியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், வரும், 17க்குள் நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற மொபைல் எண் வாயிலாகவோ பதிவு செய்ய வேண்டும். இவ்-வாறு அதில் தெரிவித்துள்ளார்.