/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
/
வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 17, 2025 02:13 AM
கரூர், 'வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது' என, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே, பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வெள்ளாடு, செம்மறி ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், நாளை நடக்கிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், நேரடியாக பயிற்சி தினத்தில் காலை, 10:30 மணிக்கு வந்து பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண், 04324-294335 மற்றும் மொபைல் எண், 7339057073 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.