ADDED : செப் 11, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் பண்டுதகாரன்புதுார் அரசு கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நாளை ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், மரபு சாரா மூலிகை மருத்துவ முறை மற்றும் கால்நடை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில், கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். நாளை காலை, 10:30 மணிக்கு தொடங்க உள்ள பயிற்சி முகாமில், பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும், 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தகவலை, பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான அமுதா தெரிவித்துள்ளார்.