ADDED : மே 27, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வெள்ளியணை அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பொரணி கும்மாயம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, 60, முருகேசன், 36, நாகராஜ், 32, சீரங்கன், 65, சரவணன், 43, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.