ADDED : ஜூலை 21, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பெருமாள்பட்டி குடியிருப்பு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக சக்திவேல், 53, தங்க ராஜ், 42, பொம்முராஜ், 42, கருப்பையா, 46, ஆகிய நான்கு பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், வெள்ளியணை அருகே உப்பிடமங்கலம் மார்க்கெட் பகுதியில், பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக சரவணன், 45, பழனிசாமி, 63, முருகேசன், 52, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

