/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேய்ச்சல் நிலமாக மாறிய காந்தி சிலை ரவுண்டானா
/
மேய்ச்சல் நிலமாக மாறிய காந்தி சிலை ரவுண்டானா
ADDED : ஆக 31, 2024 12:31 AM
கரூர்: கரூர், லைட்ஹவுஸ் கார்னர் காந்தி சிலை ரவுண்டானாவில், பராம-ரிப்பு இல்லாததால் அதிகளவில் முட்புதர்கள் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில், கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்-படும் அபாயம் உள்ளது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் கடந்த, 2021 ல் பிப்., மாதம் அப்போதைய முதல்வர் பழனிசாமி, புதிய காந்தி சிலையை திறந்து வைத்தார். தற்போது, மழை காரணமாக ரவுண்-டானாவில், அதிகளவில் புற்கள், செடி,
கொடிகள் முளைத்துள்-ளது. அதை அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க-வில்லை.
இந்நிலையில், ரவுண்டானாவில் உள்ள செடி, கொடிகளை சாப்-பிட மாடுகள், கால்நடைகள் அதிகளவில் வருகிறது. கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க-ளுக்கு, பஸ்கள் லைட் ஹவுஸ்
கார்னர் ரவுண்டானா வழியாக செல்கிறது.அப்போது ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் ரவுண்டானா பகுதியில், உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, முட்புதர்களை அகற்றி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை-களை சாலையில் மேய விடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.