/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் சாலையில் குப்பைக்கு தீ வைப்பு
/
வாங்கல் சாலையில் குப்பைக்கு தீ வைப்பு
ADDED : அக் 21, 2025 01:52 AM
கரூர், வாங்கல் சாலையில் குப்பைக்கு தீ வைப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர், வாங்கல் சாலையில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குப்பை சேகரித்து, வாங்கல் சாலையிலுள்ள குப்பை கிடங்கிற்கு நகராட்சி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதில், தனியார் நிறுவனங்களிலிருந்து, அனுமதியில்லாமல் அரசு காலனி பகுதி சாலையில் குப்பை கொட்டி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியும், சுகாதார கேடும் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலையில் கொட்டி கிடக்கும் குப்பையை அகற்றாமல், மாநகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரித்து விடுகின்றனர். கரூரிலிருந்து வாங்கல் செல்லும் சாலையில் புகை மண்டலமாக மாறி, எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே, முறைப்படி, குப்பையை எடுத்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.