/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
கரூரில் வரும் 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூரில் வரும் 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூரில் வரும் 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:33 AM
கரூர்: கரூரில் வரும், 31ல் காஸ் (எரிவாயு) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை-களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப் போக்கு தொடர்பாக வரும் புகார் குறித்து, விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும். மேலும், ஆயில் நிறுவனங்களின் விதிமு-றைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்களுடன் குறைதீர் கூட்டம் வரும், 31 மாலை, 3.00 மணிக்கு நடக்கிறது. எனவே, நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

