/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 24, 2025 01:24 AM
கரூர், காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்கிறது.
இது குறித்து, கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையா-ளர்களுடன் குறைதீர் கூட்டம் வரும், 27 மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கு-வதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறை-களின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தன போக்கு தொடர்பாக, புகார் குறித்து விவாதித்து நடவ-டிக்கை எடுக்கப்படும்.
ஆயில் நிறுவனங்களின் விதிமு-றைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

