/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
கரூரில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 29, 2025 07:04 AM
கரூர்: காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில், கரூர் மாவட்டத்தில் அனைத்து காஸ் ஏஜென்சிகள், வாடிக்கையாளர்களுடன் குறைதீர் கூட்டம் நாளை (30ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதில், நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் முறைகேடு, நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் ஏஜென்சிகளின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரும் புகார்கள் குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆயில் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிலிண்டர் வினியோகத்தை சீர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குறைதீர் கூட்டத்தில் நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.