/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
/
மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
ADDED : ஜன 06, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி
செல்லம்மாள், 72; இவர் கடந்த, 28 மதியம், கரூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர், செல்லம்மாள் அணிந்திருந்த, ஐந்தேகால் பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இதுகுறித்து, செல்லம்மாள் அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.