ADDED : ஜூலை 20, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட, இரண்டா-வது பேரவை கூட்டம், தலைவர் தனலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
அதில், பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் துறை கிராம உத-வியாளர், ஊர்ப்புற நுாலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூ-தியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத பணிக்காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் சிங்கராயர், இணை செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் தனபால் உள்பட, பலர் பங்கேற்றனர்.