/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி மறுநாள் பொது விடுமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
/
தீபாவளி மறுநாள் பொது விடுமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தீபாவளி மறுநாள் பொது விடுமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
தீபாவளி மறுநாள் பொது விடுமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ADDED : அக் 15, 2025 01:34 AM
கரூர், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி, தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.,21ல் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அக்.,18, 19 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், அக்., 20 திங்களன்று தீபாவளி பண்டிகை என, மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவர்.
அதே போல பள்ளிகளில், கல்லுாரிகளில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் சொந்த ஊருக்கு சென்று வருவோர், பொது போக்குவரத்து என கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே தீபாவளி பண்டிகையான அக்.,20ம் தேதிக்கு மறுநாள் செவ்வாய்க்
கிழமை (அக்.,21) அன்று அரசு பள்ளிகள், கல்லுாரி, அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.