/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
/
கிராவல் மண் கடத்தல் 2 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 17, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, கனிம வளத்துறை ஆய்வாளர் கார்த்திக், நேற்று முன்தினம் சின்னதாராபுரம் அருகே, கஞ்சினாம்பட்டி பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, டாரஸ் லாரியில் ஆறு யூனிட் கிராவல் மண் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கனிம வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார், டாரஸ் லாரி உரிமையாளர் பெரியசாமி, டிரைவர் மூர்த்தி ஆகியோர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

