/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு
/
கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு
ADDED : நவ 12, 2024 01:35 AM
கரூரில் குறைதீர் கூட்டம்: 413 மனுக்கள் குவிப்பு
கரூர், நவ. 12-
கரூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் கார்டு கோருதல் உள்ளிட்ட, 413மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மாற்றுத்திறனாளிகளிடம், 46 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீ லேகா, சப் கலெக்டர் சுவாதி, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.