/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1.89 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.1.89 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : பிப் 28, 2024 07:48 AM
கரூர் : கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஏலம் நடைபெறும். கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவர்.இங்கு, ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நிலக்கடலை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 74 மூட்டை நிலக் கடலையை விற்பனைக்கு கொண்டுவந்தனர். கிலோ குறைந்தபட்ச விலையாக, 75.60 ரூபாய், அதிகபட்ச விலையாக, 77.60 ரூபாய், சராசரி விலையாக, 76.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,485 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 1.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

