/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது குண்டாஸ்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் மீது குண்டாஸ்
ADDED : மார் 29, 2025 07:14 AM
கரூர்: கரூரில் சிறுமியிடம், ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, மகளிர் போலீசார் குண்டர் சட்-டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் விக்னேஷ், 19; கோவையில் தனியார் மருத்துவ-மனையில், லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இந்நி-லையில் கடந்த, 2023 முதல் அதே பகுதியை சேர்ந்த, ஆறு வயது-டைய சிறுமியிடம், ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, விக்னே ைஷ போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த, 5 ல் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.இந்நிலையில், விக்னேைஷ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலு-வுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து, விக்னே ைஷ குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று திருச்சி மத்திய சிறையில் உள்ள, விக்னேஷிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்-பட்டதற்கான நகலை, கரூர் மகளிர் போலீசார் வழங்கினர்.