sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை

/

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை


ADDED : டிச 03, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழை

கரூர், டிச. 2-

கரூர் மாவட்டத்தில், நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

வருகிறது. கரூர் மாவட்டத்துக்கு கன மழை பாதிப்பு குறித்த அறிவிப்பு இல்லை என்ற நிலையிவங்க கடலில், 'பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த, மூன்று நாட்களாக மழை பெய்து லும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் கரூர் மாவட்டம் முழுவதும், விடிய, விடிய மழை பெய்தது. மழையுடன் குளிர்ந்த காற்று வீசியதால், அவதிப்பட்ட பொதுமக்கள் குடை, ஸ்வெட்டர், ரெயின் கோட் சகிதம், கரூரில் உலா வந்தனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,ல்): கரூர், 7.40, அரவக்குறிச்சி, 9, அணைப்பாளையம், 6.20, க.பரமத்தி, 7, குளித்தலை, 14.20, தோகைமலை, 9.20, கிருஷ்ணராயபுரம், 13.50, மாயனுார், 15, பஞ்சப்பட்டி, 10.60, மயிலம்பட்டி, 4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.01 மி.மீ., மழை பதிவானது.

அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 799 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.80 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 304 கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றில், 788 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மாயனுார் கதவணை: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,257 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 657 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்

பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.74 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 43 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us